வெள்ளி, 16 டிசம்பர், 2011

Blood Pressure - ரா? கூலா தண்ணீர் குடிங்க!




லைப்பைப் பார்த்தவுடன் அனைவருமே, தண்ணி என்றவுடன் அந்த ‘தண்ணி’ என்று நினைத்து விடாதீர்கள்.
நிறைய  தண்ணீர் குடிப்பதால் பல்வேறு பலன்கள் இருப்பது நமக்குத் தெரியும்.  லேட்டஸ்டாக ரத்த அழுத்தத்தை சீராக வைக்க, நரம்பு உறுதி, சக்தி  அதிகரிப்புக்கு தண்ணீர் உதவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில்  உள்ளது வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையம். அதன் ஆராய்ச்சியாளர்கள்  குழு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றி  ஆராய்ந்தனர். தண்ணீர் குடித்ததும் அது ரத்த தமனி களில் அடைப்புகளை கரைந்து  ஓடச் செய்வது ஆய்வில் தெரிய வந்தது. அதன் மூலம், உடலில் ரத்த அழுத்தம்  சீராக பராமரிக்கப்படும்.

எனவே, ரத்த அழுத்த நோயாளிகள் மயக்கம்,  தலைச்சுற்றல், வாந்தி உணர்வு போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், ஒரு டம்ளர்  குளிர்ந்த தண்ணீர் குடிப்பது நல்லது. அத்துடன், நரம்பு மண்டலத்தின்  செயல்பாட்டையும் தண்ணீர் உறுதிப்படுத்துகிறது. அன்றாட வேலைகளின்போது  ஏற்படும் சக்தி இழப்பைக் குறைக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள்  கண்டுபிடித்துள்ளனர்.

இதுபற்றி வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ  மையப் பேராசிரியர்கள் கூறுகையில், ‘‘ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை  தண்ணீர் ஏற்படுத்துவதும், நரம்பு மண்டலத்தை உறுதியாக்குவதும் தெரிய  வந்துள்ளது.

இந்தப் பிரிவில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது’’ என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.

நன்றி: வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையம்




லைப்பைப் பார்த்தவுடன் அனைவருமே, தண்ணி என்றவுடன் அந்த ‘தண்ணி’ என்று நினைத்து விடாதீர்கள்.
நிறைய  தண்ணீர் குடிப்பதால் பல்வேறு பலன்கள் இருப்பது நமக்குத் தெரியும்.  லேட்டஸ்டாக ரத்த அழுத்தத்தை சீராக வைக்க, நரம்பு உறுதி, சக்தி  அதிகரிப்புக்கு தண்ணீர் உதவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில்  உள்ளது வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையம். அதன் ஆராய்ச்சியாளர்கள்  குழு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றி  ஆராய்ந்தனர். தண்ணீர் குடித்ததும் அது ரத்த தமனி களில் அடைப்புகளை கரைந்து  ஓடச் செய்வது ஆய்வில் தெரிய வந்தது. அதன் மூலம், உடலில் ரத்த அழுத்தம்  சீராக பராமரிக்கப்படும்.

எனவே, ரத்த அழுத்த நோயாளிகள் மயக்கம்,  தலைச்சுற்றல், வாந்தி உணர்வு போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், ஒரு டம்ளர்  குளிர்ந்த தண்ணீர் குடிப்பது நல்லது. அத்துடன், நரம்பு மண்டலத்தின்  செயல்பாட்டையும் தண்ணீர் உறுதிப்படுத்துகிறது. அன்றாட வேலைகளின்போது  ஏற்படும் சக்தி இழப்பைக் குறைக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள்  கண்டுபிடித்துள்ளனர்.

இதுபற்றி வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ  மையப் பேராசிரியர்கள் கூறுகையில், ‘‘ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை  தண்ணீர் ஏற்படுத்துவதும், நரம்பு மண்டலத்தை உறுதியாக்குவதும் தெரிய  வந்துள்ளது.

இந்தப் பிரிவில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது’’ என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.

நன்றி: வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...