சனி, 16 ஏப்ரல், 2011

முஸ்லிம் பெண்களின் நிகாப் (முகத்தை மூடும் ஆடை) மீது குறிவைத்த ஃபிரான்ஸ் அரசாங்கம்!

பொது இடங்களில் முஸ்லீம் பெண்கள் முகத்தை முழுமையாக மூடும் ஆடைகளை (நிகாப் உடை) அணிவதற்கு பிரான்ஸ் தடை விதித்துள்ளது. பிரான்சின் இந்த சர்ச்சைக்குரிய சட்டம் இம் மாதம் 11 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. பிரான்ஸில் அலுவலகங்களில் மற்றும் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் மாணவிகள் அணியும் ஹிஜாப் போன்ற இஸ்லாமிய உடைகளை தடை செய்யும் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அந்த சட்டத்தை மேலும் விரிவாகியுள்ள பிரான்ஸ் அனைத்து பொது இடங்களிலும் நிகாப்பை - முகத்தை மூடி அணியும் உடை- அணிவதை தடை செய்யும் சட்டம் ஒன்றை அமுல்படுத்தியுள்ளது.
 
பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோழி முஸ்லிம் அடையாளங்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி செயல்பட்டு வருவதாகவும் இது ஒரு சாராரின் வாக்களை குறிவைத்து இருப்பதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். பிரான்ஸில் நிகாப் உடை முழுமையாக தண்டனைக்குரிய குற்றமாக இன்று பிரகடன படுத்தியுள்ளது. பல மேற்கு நாடுகளில் முஸ்லிம்கள் பல அடக்கு முறைகளை எதிர் கொண்டு வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது.  முஸ்லிம் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிரான சட்டங்கள் என்ற போர்வையில் இஸ்லாத்தை வலுவாக பின்பற்றுபவர்களுக்கு எதிரான அடக்குமுறை விதிகள் அதிகரித்து வருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளது.
 
பொது இடங்களில் முகத்தை மூடும் ஆடைகளை அணிவதற்கான தடை உத்தரவு அறிக்கையில் உள்துறை அமைச்சர் கிளாடே குயன்ட் கடந்த வாரம் கையெழுத்திட்டார். இந்த உத்தரவை மீறி முகத்தை மூடும் ஆடைகளை அணியும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் போலிஸ் நிலையத்தில் 4 மணி நேரம் வைக்கப்படலாம் அல்லது 150 யூரோ அபராதம் விதிக்கப்படலாம் என அரசு அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அணியச் சொல்லி யாரும் வற்புறுத்தினால் அவர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என பிரான்ஸ் சட்டம் கூறுகின்றது. பூங்காக்கள், கடைகள், சினிமா அரங்குகள் மற்றும் பிரார்த்தனை இடங்கள் ஆகியவற்றில் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைக்கும் பர்தாவை அணியக் கூடாது.
 
பிரான்ஸ் 70 லட்சம் முஸ்லிம்களை கொண்டுள்ள நாடு என்பது  குறிபிடத்தக்கது. எனினும் நிகாப் அணிபவர்களின் எண்ணிக்கை மிகவும் சிறிய தொகை என்று தெரிவிக்கபடுகின்றது. இங்கு பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் முழுமையான இஸ்லாமிய உடையில் இருந்தாலும் நிகாப் அணிபவர்கள் 2000 பேர்வரைதான் என்று பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றது.
 
வரலாற்று சுவடுகள்:
 
பாபிலோனிய நாகரீகம் ஒரு மனிதன் ஒரு பெண்ணைக் கொலை செய்து விட்டால் அவருக்கு மரண தன்டனை வழங்குவதற்கு பதிலாக அவருடைய மனைவிக்கு மரண தண்டனை வழங்கியது . கிரேக்க நாகரீகம் கிரேக்கர்கள் பெண்களை மனித குலத்தில் தாழந்தவர்கள் என்றும் ஆண்களுக்கு அடிமைகள் என்றும் கருதியது ரோமானிய நாகரீகம் புகழின் உச்சநிலையில் இருந்தபோது கூட ஒரு ஆண் தனது மனைவியை கொலை செய்வதை தனது உரிமையாக கருதியது.
 
எகிப்தியர்கள் பெண்களை ஒரு தீமையாகவும் சாத்தானின் சின்னமாகவும் கருதியது, அரேபியர்கள் பெண்களை கீழத்தரமாக மதித்தார்கள். பெண்குழந்தைகள் பிறந்தால் அவைகளை உயிரோடு மண்ணில் புதைத்தார்கள். இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்னர் பெண் ஒரு குடும்பத்தின் பொக்கிஷம் என்று போதித்து.
  
இன்றைய மேற்கு உலகில்  பெண்களை முழு நிர்வாணபடுத்தி அனைவரும் அனுபவிக்கும் பொது சொத்தாக மாற்ற துடிக்கின்றது. ஆனால் இஸ்லாம் ஆணையும் பெண்களையும் சமமாக பார்க்கின்றது. இஸ்லாத்தின் எழுச்சியை கண்டு அதிர்வடையும் மேற்கு உலகு இன்று அதிகமாக இஸ்லாமிய உடை மீது தனது கவனத்தை முழுமையாக திருப்பியுள்ளது.
 
நன்றி: அவர்உம்மாஹ், நியூஸோநியூஸ்.  

 
பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோழி முஸ்லிம் அடையாளங்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி செயல்பட்டு வருவதாகவும் இது ஒரு சாராரின் வாக்களை குறிவைத்து இருப்பதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். பிரான்ஸில் நிகாப் உடை முழுமையாக தண்டனைக்குரிய குற்றமாக இன்று பிரகடன படுத்தியுள்ளது. பல மேற்கு நாடுகளில் முஸ்லிம்கள் பல அடக்கு முறைகளை எதிர் கொண்டு வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது.  முஸ்லிம் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிரான சட்டங்கள் என்ற போர்வையில் இஸ்லாத்தை வலுவாக பின்பற்றுபவர்களுக்கு எதிரான அடக்குமுறை விதிகள் அதிகரித்து வருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளது.
 
பொது இடங்களில் முகத்தை மூடும் ஆடைகளை அணிவதற்கான தடை உத்தரவு அறிக்கையில் உள்துறை அமைச்சர் கிளாடே குயன்ட் கடந்த வாரம் கையெழுத்திட்டார். இந்த உத்தரவை மீறி முகத்தை மூடும் ஆடைகளை அணியும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் போலிஸ் நிலையத்தில் 4 மணி நேரம் வைக்கப்படலாம் அல்லது 150 யூரோ அபராதம் விதிக்கப்படலாம் என அரசு அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அணியச் சொல்லி யாரும் வற்புறுத்தினால் அவர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என பிரான்ஸ் சட்டம் கூறுகின்றது. பூங்காக்கள், கடைகள், சினிமா அரங்குகள் மற்றும் பிரார்த்தனை இடங்கள் ஆகியவற்றில் முஸ்லீம் பெண்கள் முகத்தை மறைக்கும் பர்தாவை அணியக் கூடாது.
 
பிரான்ஸ் 70 லட்சம் முஸ்லிம்களை கொண்டுள்ள நாடு என்பது  குறிபிடத்தக்கது. எனினும் நிகாப் அணிபவர்களின் எண்ணிக்கை மிகவும் சிறிய தொகை என்று தெரிவிக்கபடுகின்றது. இங்கு பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் முழுமையான இஸ்லாமிய உடையில் இருந்தாலும் நிகாப் அணிபவர்கள் 2000 பேர்வரைதான் என்று பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றது.
 
வரலாற்று சுவடுகள்:
 
பாபிலோனிய நாகரீகம் ஒரு மனிதன் ஒரு பெண்ணைக் கொலை செய்து விட்டால் அவருக்கு மரண தன்டனை வழங்குவதற்கு பதிலாக அவருடைய மனைவிக்கு மரண தண்டனை வழங்கியது . கிரேக்க நாகரீகம் கிரேக்கர்கள் பெண்களை மனித குலத்தில் தாழந்தவர்கள் என்றும் ஆண்களுக்கு அடிமைகள் என்றும் கருதியது ரோமானிய நாகரீகம் புகழின் உச்சநிலையில் இருந்தபோது கூட ஒரு ஆண் தனது மனைவியை கொலை செய்வதை தனது உரிமையாக கருதியது.
 
எகிப்தியர்கள் பெண்களை ஒரு தீமையாகவும் சாத்தானின் சின்னமாகவும் கருதியது, அரேபியர்கள் பெண்களை கீழத்தரமாக மதித்தார்கள். பெண்குழந்தைகள் பிறந்தால் அவைகளை உயிரோடு மண்ணில் புதைத்தார்கள். இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்னர் பெண் ஒரு குடும்பத்தின் பொக்கிஷம் என்று போதித்து.
  
இன்றைய மேற்கு உலகில்  பெண்களை முழு நிர்வாணபடுத்தி அனைவரும் அனுபவிக்கும் பொது சொத்தாக மாற்ற துடிக்கின்றது. ஆனால் இஸ்லாம் ஆணையும் பெண்களையும் சமமாக பார்க்கின்றது. இஸ்லாத்தின் எழுச்சியை கண்டு அதிர்வடையும் மேற்கு உலகு இன்று அதிகமாக இஸ்லாமிய உடை மீது தனது கவனத்தை முழுமையாக திருப்பியுள்ளது.
 
நன்றி: அவர்உம்மாஹ், நியூஸோநியூஸ்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...