ஞாயிறு, 6 மார்ச், 2011

தெரிந்த அரிசி வகைகளும்! தெரியாத விஷயங்களும்!

நமது நாட்டின் முக்கிய உணவு வகைகளில் அரிசி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. அரிசியாலான  சோறு, அரிசி மாவில் செயப்படும் இட்லி, தோசை என எல்லாமே அரிசியால் செய்யப்படுகிறது.  இப்படி அதிகம் பயன்படும் அரிசி வகைகளால் ஏதேனும் நன்மை உண்டா? என்றால் கண்டிப்பாக உண்டு எனக் கூறலாம்.
 
அரிசியின் வகைகள்:

கார் அரிசி - இந்த வகையான அரிசியை நமது உணவில் சேர்த்துக்கொண்டால், உடல் நல்ல உறுதி அடையும், தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி அடையும்.  உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன்றும். சருமம் மென்மையாகவும், பட்டுப்போலவும் அமையும்.
 
குண்டு சம்பா அரிசி - இந்த அரிசியை உணவில் சேர்த்துக்கொண்டால், நாவறட்சியை தீர்க்கும்.  ஆனால் இந்த வகை அரிசி கரப்பான் பிணியை உண்டாக்கக் கூடும்.  பசியை மந்திக்க செய்யும்.
குன்று மணி சம்பா அரிசி - இந்த அரிசி வாதக் குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு.  விந்தைப் பெருக்கச் செய்யும்.  உடல் வன்மையைப் பெரும்.
 
 
சீராகச் சம்பா அரிசி -  இந்த அரிசி சிறுவாத நோய்களைக் குணமாக்கும். பசியை அதிகரிக்கச் செய்யும்.
செஞ்சம்பா அரிசி - இந்த அரிசி சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களை உண்டாக்கும். பசியை அதிகரிக்கச் செய்யும்.
கோடைச்சம்பா அரிசி -  இந்த அரிசி வாதப்பித்த நோய்களை குணப்படுத்தும். உடலிற்கு குளிர்ச்சித் தரும்.
ஈர்க்குசம்பா அரிசி - இந்த  அரிசி சாப்பிட மிகையும் சுவையாக இருக்கும்.  கண்களின் நலனுக்கு இது மிகவும் சிறந்தது.  சிறிதளவு பித்தக் கோளாறுகளை உண்டாக்கும்.
பச்சரிசி - இந்த  அரிசி வாதக் குறைபாடுகளை உண்டாகக் கூடும்.  பக்கவாதம், உடல் உறுப்புக்களில் சுரணையற்ற தன்மை ஏற்படக் கூடும். பித்த எரிச்சலை விலக்கும்.  உடல் வன்மையைப் பேருக்கும்.
புழுங்கல் அரிசி - இந்த  அரிசி எல்லா வயதினருக்கும், எல்லா தரத்தினருக்கும் சிறந்தது.  குறிப்பாக குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது.  அரிசியின் முழு சத்தும் வீணாகாமால் தருவது புழுங்கல் அரிசிதான்.  நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட ஏற்றது புழுங்கல் அரிசிதான்.
சாமை அரிசி - இந்த  அரிசி புன்செய் தானிய வகைகளில் ஒன்றுதான்.  இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும்.  உடலை நல்ல வலிமையாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
தினை அரிசி -  இந்த  அரிசியும்  புன்செய் தானிய வகைகளில் ஒன்றுதான்.  சளியை போக்கும்.  காய்ச்சல் வேகத்தை தணிக்கும்.  இரத்த சோகையை அகற்றும்.  ஆனால் அதிகம் சேர்த்துக்கொண்டால் பித்தம் அதிகரிக்கும்.
திப்பிலி அரிசி - இந்த  அரிசி விந்தினை வளர்க்கும். மேகநோயை குணமாக்கும்.
 
நன்றி : தமிழ் வெப்துனியா  

நமது நாட்டின் முக்கிய உணவு வகைகளில் அரிசி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. அரிசியாலான  சோறு, அரிசி மாவில் செயப்படும் இட்லி, தோசை என எல்லாமே அரிசியால் செய்யப்படுகிறது.  இப்படி அதிகம் பயன்படும் அரிசி வகைகளால் ஏதேனும் நன்மை உண்டா? என்றால் கண்டிப்பாக உண்டு எனக் கூறலாம்.
 
அரிசியின் வகைகள்:

கார் அரிசி - இந்த வகையான அரிசியை நமது உணவில் சேர்த்துக்கொண்டால், உடல் நல்ல உறுதி அடையும், தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி அடையும்.  உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன்றும். சருமம் மென்மையாகவும், பட்டுப்போலவும் அமையும்.
 
குண்டு சம்பா அரிசி - இந்த அரிசியை உணவில் சேர்த்துக்கொண்டால், நாவறட்சியை தீர்க்கும்.  ஆனால் இந்த வகை அரிசி கரப்பான் பிணியை உண்டாக்கக் கூடும்.  பசியை மந்திக்க செய்யும்.
குன்று மணி சம்பா அரிசி - இந்த அரிசி வாதக் குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு.  விந்தைப் பெருக்கச் செய்யும்.  உடல் வன்மையைப் பெரும்.
 
 
சீராகச் சம்பா அரிசி -  இந்த அரிசி சிறுவாத நோய்களைக் குணமாக்கும். பசியை அதிகரிக்கச் செய்யும்.
செஞ்சம்பா அரிசி - இந்த அரிசி சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களை உண்டாக்கும். பசியை அதிகரிக்கச் செய்யும்.
கோடைச்சம்பா அரிசி -  இந்த அரிசி வாதப்பித்த நோய்களை குணப்படுத்தும். உடலிற்கு குளிர்ச்சித் தரும்.
ஈர்க்குசம்பா அரிசி - இந்த  அரிசி சாப்பிட மிகையும் சுவையாக இருக்கும்.  கண்களின் நலனுக்கு இது மிகவும் சிறந்தது.  சிறிதளவு பித்தக் கோளாறுகளை உண்டாக்கும்.
பச்சரிசி - இந்த  அரிசி வாதக் குறைபாடுகளை உண்டாகக் கூடும்.  பக்கவாதம், உடல் உறுப்புக்களில் சுரணையற்ற தன்மை ஏற்படக் கூடும். பித்த எரிச்சலை விலக்கும்.  உடல் வன்மையைப் பேருக்கும்.
புழுங்கல் அரிசி - இந்த  அரிசி எல்லா வயதினருக்கும், எல்லா தரத்தினருக்கும் சிறந்தது.  குறிப்பாக குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது.  அரிசியின் முழு சத்தும் வீணாகாமால் தருவது புழுங்கல் அரிசிதான்.  நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட ஏற்றது புழுங்கல் அரிசிதான்.
சாமை அரிசி - இந்த  அரிசி புன்செய் தானிய வகைகளில் ஒன்றுதான்.  இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும்.  உடலை நல்ல வலிமையாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
தினை அரிசி -  இந்த  அரிசியும்  புன்செய் தானிய வகைகளில் ஒன்றுதான்.  சளியை போக்கும்.  காய்ச்சல் வேகத்தை தணிக்கும்.  இரத்த சோகையை அகற்றும்.  ஆனால் அதிகம் சேர்த்துக்கொண்டால் பித்தம் அதிகரிக்கும்.
திப்பிலி அரிசி - இந்த  அரிசி விந்தினை வளர்க்கும். மேகநோயை குணமாக்கும்.
 
நன்றி : தமிழ் வெப்துனியா  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...