வியாழன், 10 மார்ச், 2011

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது!!!


ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)அவர்களிடம், 'எனக்கு குர்ஆனை ஓதிக்காட்டுங்கள்!' என்று கூறினார்கள்.  அதற்கு அவர், 'தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், 'நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்' என்று கூறினார்கள். ஆகவே, அவர் நபியவர்களுக்கு "அந்நிஸா" எனும் (நான்காவது) அத்தியாயத்தை ஓதிக்காட்டினார்.  "ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும்போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாக கொண்டுவரும்போதும் (இவர்களின் நிலை) எப்படி இருக்கும்?" எனும் (4:41 ஆவது )  வசனத்தை அவர் அடைந்த போது தலையை உயர்த்தினார் அல்லது அவருக்கு பக்கத்திலிருந்த ஒருவர் அவரை தொட்டுணர்த்தியபோது,   அவர் தலையை உயர்த்தினார்.  அப்போது அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்ததைக் கண்டார். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) - நூல் : முஸ்லிம்).


ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)அவர்களிடம், 'எனக்கு குர்ஆனை ஓதிக்காட்டுங்கள்!' என்று கூறினார்கள்.  அதற்கு அவர், 'தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், 'நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்' என்று கூறினார்கள். ஆகவே, அவர் நபியவர்களுக்கு "அந்நிஸா" எனும் (நான்காவது) அத்தியாயத்தை ஓதிக்காட்டினார்.  "ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும்போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாக கொண்டுவரும்போதும் (இவர்களின் நிலை) எப்படி இருக்கும்?" எனும் (4:41 ஆவது )  வசனத்தை அவர் அடைந்த போது தலையை உயர்த்தினார் அல்லது அவருக்கு பக்கத்திலிருந்த ஒருவர் அவரை தொட்டுணர்த்தியபோது,   அவர் தலையை உயர்த்தினார்.  அப்போது அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்ததைக் கண்டார். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) - நூல் : முஸ்லிம்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள...